ஆயூஷ் மருந்துகள் ஒருங்கிணைந்த தரம், செயல்திறன், மற்றும் பாதுகாப்பு நோக்கத்தை கொண்டு செயல்பட்டு வருகிறது. சாகுபடி மானியம் விவசாயிகளுக்கு கொடுத்து அதிகமான ஏற்றுமதி மற்றும் மதிப்பு கூட்டுதல் பொருட்களை தருவதற்கு செயல்பட்டு வருகிறது
தேசிய ஆயூஷ் இயக்கம் – மருத்துவப் பயிர்கள் திட்டம், மத்திய அரசின், ஆயூஷ் சொசைட்டியின் கீழ் 60 (மத்திய அரசு) : 40 (மாநில அரசு) சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சாகுபடி மானியமாக மொத்த சாகுபடி செலவில் 30%, 50% மற்றும் 75% மானியம் வழங்கப்பட்டு வருகிறது.